Saturday, 24 March 2012

PFI-AMBULANCE-INAGURATION_LIVE


தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

 

அவசர உதவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தியிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
கன்னியாகுமர் மாவட்டம் கோட்டார் இடலாக்குடியில் சந்தி தெருவில் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை நடத்தும் ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியை குமரி மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி தலைமை தாங்கி நடத்தி தர இருக்கின்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் மற்றும் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

(இந்த நிகழ்ச்சி  இடலாக்குடி  வலைப்பூவில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்)

Monday, 9 January 2012

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள் நபிமார்களின் பெயர்கள்


திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

நபிமார்களின் பெயர்கள் வசன எண்

1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30

2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25

3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56

4 இப்ராஹீம்(ஆபிரகாம் ) அலைஹிஸ் ஸலாம் 21:51

5 இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 19:54

6 இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 37:112

7 யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 12:4

8 யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 12:4

9 லூத் அலைஹிஸ் ஸலாம் 26:160

10 ஹுத் அலைஹிஸ் ஸலாம் 26:124

11 ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 26:142

12 ஷுஐப் அலைஹிஸ் ஸலாம் 26:177

13 மூஸா(மோசஸ் ) அலைஹிஸ் ஸலாம் 28:7

14 ஹாருன் அலைஹிஸ் ஸலாம் 19:53

15 தாவூத்(தாவீத்) அலைஹிஸ் ஸலாம் 38:17

16 ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் 27:15

17 ஐயூப் அலைஹிஸ் ஸலாம் 38:41

18 துல்கிப்லு அலைஹிஸ் ஸலாம் 38:48

19 யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் 37:139

20 இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம் 37:123

21 அல்யஸவு அலைஹிஸ் ஸலாம் 38:48

22 ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம் 19:2

23 யஹ்யா அலைஹிஸ் ஸலாம் 19:12

24 ஈஸா(இயேசு ) அலைஹிஸ் ஸலாம் 19:30

25 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் 48:29

Wednesday, 21 December 2011

ANNA UNIVERSITY - TIME TABLE -M.B.A.DEGREE EXAMINATIONS - JANUARY - 2012

TIME TABLE -M.B.A.DEGREE EXAMINATIONS - JANUARY - 2012 Regulations - 2009
1st Semester Session : :Forenoon:10 A.M. to 1 P.M.
20/01/2012 Friday BA9201: Statistics for Management
21/01/2012 Saturday BA9205: Communication Skills
23/01/2012 Monday BA9202: Economic Analysis for Business
25/01/2012 Wednesday BA9203: Total Quality Management
27/01/2012 Friday BA9204: Organizational Behaviour
30/01/2012 Monday BA9206: Accounting for Management
01/02/2012 Wednesday BA9207: Legal Aspects of Business

ரூபாய்க்கு மதிப்பு போச்சு!




ரூபாய்க்கு மதிப்பு போச்சு!



 இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையானச் சரிந்துள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு? ‘பட்ட காலிலே படும்’ என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை! விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறிப் போயிருக்கும் சாதாரண மக்களுக்கு மேலும் ஒரு சோதனை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு 46அல்லது 47ரூபாயாக இருந்தது போக, இப்போது (25.11.2011நிலவரப்படி) 52.25ஆக சரிந்துவிட்டது. இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வியாபாரிகள் தவிர, சாதாரண மக்களுக்கும் நிறைய பாதிப்புண்டு.
 அநேகமாக, எல்லா நாடுகளும் அமெரிக்க டாலரை, ஏறக்குறைய ஒரு பொது நாணயமாகவே கருதுகின்றன. நாம் எல்லோருமே நம் அன்றாடத் தேவைகளுக்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களை நம்பி இருக்கிறோம். உதாரணத்துக்கு கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், மருந்து வகைகள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இவற்றுக்கு நாம் டாலரில்தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு டாலருக்கான பொருளை 46ரூபாய் கொடுத்து வாங்குவதற்குப் பதில், இப்போது 52ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி உள்ளது அல்லவா? இது தவிர, இந்தச் சரிவால் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கும், சில மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இந்த இறக்குமதியினால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், மருந்துகளின் விலை மேலும் அதிகரிக்கும். பெட்ரோலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அதன் விலை ஏறினால், போக்குவரத்து செலவு மட்டும் அல்லாமல், பல்வேறு பொருள்களின் விலையும் ஏறும்.
 சரிவுக்கு காரணம் என்ன? அமெரிக்கா, 2008ம் ஆண்டு சந்தித்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீட்சி அடையவில்லை. அந்த நாட்டுப் பொருளாதாரத்தை தூக்கிப்பிடித்திட, பல்லாயிரம் கோடி டாலர்களை புத்துயிரூட்டும் திட்டங்கள் மூலம் அமெரிக்க அரசு செலவிட்டது. அதன்பிறகும், அங்கே வேலையில்லாத் திண்டாட்டம் குறையவில்லை. இதனால், கொதித்துப்போன மக்கள், பங்குச் சந்தை, சர்வதேச நிதி நிறுவனங்கள் செயல்படும் ‘வால் ஸ்டிரீட்’டை கைப்பற்றுவோம் என்ற போராட்டத்தில் குதித்தார்கள். போராட்டம் தெருவுக்கே வந்துவிட்டது. பல ஐரோப்பிய நாடுகளிலும், நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது. கிரீஸ் அரசு கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி அதனை தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன. அதேபோல், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் கடன் சுமையை தாங்க முடியாமல் தவிக்கின்றன. அந்த நாடுகளின் பொது நாணயமான யூரோ மதிப்பிழந்துவிட்டது. அதன் விளைவு, உலகெங்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையையும், யூரோவையும் புறம் தள்ளிவிட்டு, டாலரில் முதலீடு செய்கிறார்கள். எனவே, டாலருக்கு சர்வதேச அளவில் மதிப்பு அதிகரித்துவிட்டது. இந்தியா இதற்கு விதி விலக்கு அல்ல; ரூபாயின் மதிப்பு சரிய இது ஒரு முக்கிய காரணம். ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி’ என்பதுபோல இந்திய பங்குச் சந்தையில், ஏற்கெனவே முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) தமது முதலீடுகளைத் திரும்பப் பெறத் தொடங்கினார்கள். இதனால், டாலர்கள் வெளியே சென்றன. இந்திய பங்குச் சந்தை இன்னும் எழுச்சி அடையாததால், புதிய அந்நிய நிறுவன முதலீடுகள் வரத் தொடங்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு டாலர்கள் வருவதும் குறைந்துவிட்டது.
 நமது இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், டாலருக்கு கிராக்கி ஏற்பட்டு, ரூபாய் மதிப்பு மேலும் குறைகிறது. ரூபாயின் சரிவு தொடருமா என்றால், தொடரும் என்றுதான் தோன்றுகிறது. அடுத்த ஆண்டில், டாலருக்கு 55ரூபாய் அளவுக்கு ரூபாயின் மதிப்பு குறையக் கூடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். யாருக்கு லாபம்? அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையும்போது, பொதுவாக, லாபம் அடைகிறவர்கள் ஏற்றுமதியாளர்கள்தான். ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு டாலர் மதிப்புள்ள பொருளுக்கு ரூ.46அல்லது ரூ.47க்கு பதில் ரூ.52கிடைத்தால் லாபம்தானே? ஆனால், இதிலும் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் சிக்கல், வெளிநாட்டிலிருந்து ஆர்டர் கொடுப்பவர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது என்பதை கருத்தில்கொண்டு, பொருள்களின் விலையை குறைக்கும்படி கேட்கிறார்கள். அப்படிக் குறைக்க நேர்ந்தால் லாபம் குறையும். இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் பொருந்தும். திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்பவர்களில் பலர் ரூபாயின் மதிப்பு இந்த அளவு சரியும் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஏற்றுமதி மூலம் வர உள்ள டாலருக்கு ரூ.48என்ற கணக்கில் அந்நியச் செலாவணி சந்தையில் முன் கூட்டியே ஒப்பந்தம்(Forward cover) செய்து கொண்டார்கள். இதனால், இந்த ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அளவு லாபம் கிடைக்காமல் போகலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்திற்குப் பணம் அனுப்புகையில், வழக்கமான டாலர் தொகை மட்டுமே அனுப்பினாலும், இங்குள்ள குடும்பத்தினருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும் என்பது ஒரு நல்ல செய்தி.
 இதற்கு தீர்வே இல்லையா? இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன் வசம் உள்ள கையிருப்பிலிருந்து, தேவையான அளவு டாலரை சந்தையில் (விற்பனை மூலம்) பாய்ச்சினால், உள்நாட்டில் டாலருக்கான தேவை குறையும்; ரூபாயின் மதிப்பு உயரும். சொல்லப்போனால், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி இந்த மாதிரியான நடவடிக்கையை அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால், ஏனோ அண்மைக் காலங்களில் ரிசர்வ் வங்கி, இந்தத் திசையில் களம் இறங்கவில்லை. இதனால், இந்திய வர்த்தக உலகம் ஏமாற்றம் அடைந்துள்ளது. "ஐரோப்பிய நாடுகளில் தற்சமயம் நிலவும் கொந்தளிப்பான பொருளாதாரச் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், ரூபாய் மதிப்பு பழைய நிலைக்கு வரும்" என்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பராவ். அவர் மேலும் கூறுகையில், ரிசர்வ் வங்கி ரூபாய் வீழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவசியம் நேரிடும்போது, அது களம் இறங்கும் என்கிறார். அது எப்போது நிகழுமோ தெரியவில்லை. அதுவரை மக்கள் அவதிப்பட வேண்டியதுதான் போலும்!

முல்லை பெரியாறு விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!



முல்லை பெரியாறு விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அணை பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பது பற்றிய ஆய்வுக் குழு ஒன்றை பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்திருப்பதற்கு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியுள்ள அவர், உச்சநீதிமன்ற ஐவர் குழு தற்போது ஆய்வு நடத்தி வருவதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என ஐவர் குழுவை அறிக்கை அளிக்கச் செய்வதே கேரள அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். 

இதேபோன்று ரூர்கி ஐ.ஐ.டி பேராசிரியர் பாலை முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சாட்சியாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அவரை அவசரகால ஆய்வுக் குழுவில் தற்போது சேர்த்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பாலை குழுவில் சேர்த்திருப்பதன் மூலம் கேரளாவுக்கு ஆதரவான நடவடிக்கையை அவர் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு மற்றும் ஐவர் குழு ஆய்வு செய்துவருவதை குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தற்போது அவசரகால மேலாண்மை ஆய்வு குழு தேவையற்றது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் குழு அமைப்பதற்கான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Thursday, 15 December 2011

Tamil Nadu H.S.C Exam- +2 Public Exam - Time Table - +2 அரசு பொது தேர்வு அட்டவணை

+2 அரசு பொது தேர்வு ட்டவணை 


Tamil Nadu H.S.C Exam Time Table


08/03/2012 (Thursday)
Language Paper I

09/03/2012 (Friday)
Language Paper II

12/03/2012 (Monday)
English Paper I

13/03/2012 (Tuesday)
English Paper II

16/03/2012 (Friday)
Physics, Economics, Psychology

19/03/2012 (Monday)
Mathematics, Zology, Micro Biology, Nutrition and Dietetics
20/03/2012 (Tuesday)
Commerce, Geography, Home Science

22/03/2012 (Thursday)
Chemistry, Accountancy, Shorthand

26/03/2012 (Monday)
Biology, Botany, History, Basic Science, Business Maths
28/03/2012 (Wednesday)
Computer Science, Communicate English, Indian Culture, Biochemistry, Advance Tamil, Type Writting

30/03/2012 (Friday)
Statistics, Political Science, Nursing


All the Best

Wednesday, 14 December 2011

2012 NEWYEAR CALENDER



2012 NEWYEAR CALENDER

Ancient Calendars: All ancient calendars were lunar calendars. The practice of starting a month at the first sighting of a new moon was observed not only by Romans but by Celts and Germans in Europe and by Babylonians and Hebrews in the Lavant. The new moons were sighted after either 29 or 30 days. If clouds obscured vision on the 29th day, that month was declared to have 30 days. This is still done for the Islamic Calendar.
When human civilization excelled in agriculture, there was a need for having a calendar that repeats the seasons so that it would help sowing and harvesting on repeated calendar dates. This calendar was established based on rotation of the earth around the sun. Early estimates of this rotation was 360 days, so the first solar calendar was invented having 12 months of 30 days each. Some civilizations invented a lunisolar calendar which basically had lunar months based on new crescent moons but were adding days or a month to be decided by priests/rabiis wherever and whenever they felt to satisfy social and religious needs to keep their calendar in phase with seasons. This practice of adding days or a 13th month was called "Intercalation".
Babylonian Calendar: Around 1800 B.C. Babylonians were using strictly lunar calendar based on the visible new crescent but somewhere between 1100 B.C and 800 B.C. a lunisolar calendar was adopted using intercalation which was haphazard. Some sources report that during the reign of the Babylonian king Nebuchadenezzar II (630 B.C. - 562 B.C.) priest/experts discontinued their practice of looking for the new moon and adopted a 365 day calendar of 12 months of 30 days each, with five days added at the end of the year.
Hindu Calendar: Hindus have both solar and lunisolar calendars. In the Hindu solar calendar month is 30 or 31 days and begins on the day of first sunrise after the calculated time of the mean sun's entry into the next zodiacal sign. If the calculated time is after midnight but before (or at) sunrise, then the day of entry is the first day of the new month; otherwise it is the last day of the previous month. In the Hindu lunisolar system months follow the lunar cycle and are synchronized with the solar year by introducing occasional leap months. In south-India months begin at new moon while in north-India months begin at full moon.
Chinese Calendar: Chinese also started using a lunisolar calendar with months beginning on the day of the new moon. Years contain 12 or 13 such months , with the number of months determined by the number of new moons between successive winter solstices. There have been more than 50 calendar reforms since its inception in the 14th century B.C.
Egyptian Calendar: In order to device a solar calendar in ancient times experts observed that Sirius, brightest of all the fixed stars, appeared in summer, rising above horizon just before sunrise. They also noticed that Sirius would return to its position after 365 days. Thus, Egyptians deviced a solar calendar built around 365 days. They gave up their practice of looking for the new moon in favor of the solar calendar.
Greek Calendar: By 13th century B.C. Greeks were using lunar calendar based on the visible new crescent. Later they also learnt intercalation to bring lunar calendar in phase with seasons and started using lunisolar calendar. Astronomers such as Maton in 432 B.C. calculated a 19-year lunisolar cycle where moon phases would repeat in the same seasons. This was called "Metonic Cycle" where 19 solar years were equal to lunar 19 years and 7 months. This concept was later adopted by Jewish or Hebrew calendar.
Hebrew Calendar: Hebrew Calendar, promulgated by the Patriarch, Hillel II, in the mid-fourth century is a lunisolar calndar with months based on new crescent moon but adding a 13th month every so often to bring their lunisolar calendar in phase with the seasons. It consists of 12 month in a common year and 13 months in a leap year. Leap years occur seven times in a cycle of 19 years (Metonic cycle), such that 3rd, 6th, 8th, 11th, 14th, 17th, and 19th year are leap years. Common years may have 353-355 days, while leap years may have 383-385 days. The beginning of the Hebrew new year is determined by the occurrence of the new moon (conjunction) of the seventh month (Tishri), subject to possible postponement of a day or two according to some rules.
Roman Calendar: About seven hundred years before Julius Caeser, Romans were observing some nominally lunar calendar, and were adding days or a 13th month at the end of their calendar year to keep their calendar in phase with seasons.




2012 NEWYEAR CALENDER






2012 NEWYEAR CALENDER








2012 NEWYEAR CALENDER


2012 NEWYEAR CALENDER






2012 NEWYEAR CALENDER